கோவை பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் கார்கில் வெற்றி நினைவு தினம் கொண்டாட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் கார்கில் வெற்றி 25வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் ராணுவ அதிகாரி Lt.Col. ஆர்.வி.கிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கார்கில் வெற்றியின் 25வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் உடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் நீலகண்டன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துசாமி தலைமை உரையாற்றினார்.



கார்கில் போரில் பங்கு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி Lt.Col. ஆர்.வி.கிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கார்கில் போர் குறித்தும், இந்திய ராணுவ வீரர்களின் சேவை மற்றும் தியாகம் குறித்தும் சிறப்புரையாற்றினார். மேலும், மாணவர்களுக்கு நாட்டின் முப்படையில் உள்ள படைப்பிரிவுகள் குறித்தும், இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக இணைய உள்ள வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், Lt.Col. ஆர்.வி.கிரி அவர்களுக்கு கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரியின் சுயநிதிப் பிரிவு இயக்குநர் முனைவர் ஸ்ரீதர் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் கந்தப்பன், கூட்டுறவுத்துறை தலைவர் முனைவர் வில்சன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் யுவராஜ், பேராசிரியர்கள் பிரகாஷ், கோவிந்தராஜ், சௌந்தர்ராஜ், நந்தகுமார் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 25வது ஆண்டு நினைவு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...