பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு: பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு எச்சரிக்கை

பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததால், 20,000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணை முழு கொள்ளளவை எட்டியது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரளாவின் அட்டப்பாடி மன்னார்காடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, நேற்று இரவு முதல் பில்லூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. ஜூலை 26 காலை நிலவரப்படி சுமார் 20,000 கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது. நேற்று வரை 85 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 93 அடியாக உயர்ந்து, பின்னர் 97 அடியை எட்டியது.



அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அணைக்கு வரும் 20,000 கன அடி தண்ணீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வருவதால், ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...