MYV3ADS நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் MYV3ADS நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. 69 லட்சம் மக்களை பாதித்த இந்த மோசடி வழக்கில் சக்தி ஆனந்தன் ஏற்கனவே சரணடைந்திருந்தார்.


MYV3ADS நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டிவி தமிழ்ச்செல்வி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

MYV3ADS செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கிடைக்கும் என்று கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக கோவையைச் சேர்ந்த MYV3ADS செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் அந்த வழக்கு சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே நீதிமன்றம் சக்தி ஆனந்தனை, சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சக்தி ஆனந்தன் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு சரணடைந்தார்.

பின்னர், இந்த வழக்கில் மீண்டும் ஜாமின் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஜூலை 26 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 69 லட்சம் மக்கள் இந்த செயலியால் பாதிப்புக்கு உள்ளானதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், MYV3ADS நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டிவி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார். இந்த உத்தரவு மூலம், சக்தி ஆனந்தன் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...