யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் - கோவை நீதிமன்றம் உத்தரவு

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கோவை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும், மற்றொரு வழக்கில் அவர் சிறையில் தொடர்ந்து இருப்பார்.


Coimbatore: கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவன CEO பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த மே 14-ம் தேதி சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு கோவை குற்றவியல் நான்காவது நீதிபதி முன்பு நடைபெற்று வந்தது. இதனிடையே, சிறையில் உள்ள சவுக்கு சங்கரை ஜாமினில் விடுவிக்க கோரி அவரது தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதிபதி சரணவனபாபு முன்பு நடைபெற்றது. விசாரணையின் முடிவில், சவுக்கு சங்கருக்கு சாதாரண நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

இருப்பினும், மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்திருந்தாலும், மற்ற வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் இருப்பார் என்பது தெரிகிறது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...