விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றியது யார்?: மகனின் சாவில் உரிய விசாரணை வேண்டி பெற்றோர் புகார்

கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாரன். ஓய்வுபெற்ற இராணுவ வீரர். இவரது மனைவி சாந்தி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சித்தார்த் (19) அதேப் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் தற்போது 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

இந்நிலையில், நேற்று சித்தார்த் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். இரவு 10 மணியளவில் சுங்கம் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவற்றில் மோதி சித்தார்த்திற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு 21-வது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சித்தார்த்தை சிறிது நேரத்தில் மர்மநபர் ஒருவர் அழைத்துச் சென்று சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து சித்தார்த்தும் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின் மீண்டும் அந்த மர்மநபர் சித்தார்த்தை அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கே அழைத்துவந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சித்தார்த் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, அரசு மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் மகன் சித்தார்த் உயிரிழந்தது குறித்து தகவலறிந்து அதிர்ச்சிக்குள்ளாகினர். தொடர்ந்து, தனது மகனை எதற்காக இங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினீர்கள் என்று மருத்துவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இருப்பினும் மருத்துவர்கள் முறையாக பதிலளிக்காததைத் தொடர்ந்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சித்தார்த்தின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

அதில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகனை பணத்திற்காக தனியார் மருத்துவமனைக்கு இடமாற்றியுள்ளனர். எங்களது மகனை அழைத்துச்சென்றவர் இடைத்தரகராக இருக்கலாம். அரசு மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளித்திருந்தால் சித்தார்த் உயிர் பிழைத்திருப்பார். இதில் உள்ள மர்மங்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மணிமாரன், சாந்தி தம்பதியினர் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...