கோவை மேயர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமாவைத் தொடர்ந்து இந்த தேர்தல் நடத்தப்படுகிறது.


Coimbatore: கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி ஜூலை 25-ம் தேதி அறிவித்துள்ளார்.

முன்னதாக, கோவை மாநகராட்சியின் மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பேற்றவுடன் திமுக கட்சி நிர்வாகிகளை மதிக்காமல் செயல்பட்டதாகவும், மாநகராட்சி மண்டல தலைவர்களுடன் மோதல் போக்குடன் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் முறையாக வேலை பார்க்காமல் இருந்தது உள்ளிட்ட தொடர் புகார்கள் எழுந்தன. கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் சந்தை வசூல் செய்தது, ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டது போன்ற சர்ச்சைகளும் எழுந்தன.

இந்நிலையில், கட்சி தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் உடல்நிலை மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக கூறி, கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதம் அளித்தார்.

இதையடுத்து, கோவை மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில் கல்பனா ஆனந்தகுமாரின் ராஜினாமா விவாதமின்றி தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதியின் பேரில், காலியாக உள்ள கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் திமுக தலைமை ஒரு வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நாளில் மாமன்ற உறுப்பினர்கள் மேயரை தேர்வு செய்வார்கள். திமுக பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால், திமுக வேட்பாளர் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...