பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ரூ.40 கோடியில் நான்கு வழிச்சாலை பணி: அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பல்லடம் ரோட்டில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக மாற்றும் இப்பணி காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரையிலும், காட்டம்பட்டி முதல் நெகமம் வரையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பணிகளை நேற்று (ஜூலை 23) கோவை வட்டம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தார். அப்போது விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையின் அளவு மற்றும் அதன் தரம் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். நான்கு வழிச்சாலை சிறப்பாக அமைய வேண்டிய முறைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், சாலை விரிவாக்கப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சரவணச் செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் அருணகிரி, அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இந்த நான்கு வழிச்சாலை திட்டம் நிறைவடையும்போது, பொள்ளாச்சி-பல்லடம் இடையேயான போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...