கோவையில் திமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன

கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஜூலை 25) புதிய கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் இந்த அட்டைகளை வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவள விழா ஆண்டை முன்னிட்டு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



புதிய கழக உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து தலைமைக்குக் கொடுத்தவர்களுக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டன.



கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பெரிய கடைவீதி பகுதி-2, காந்திபுரம் பகுதி ஆகிய இடங்களைச் சேர்ந்த வட்டக்கழகச் செயலாளர்கள் நா.தங்கவேல், ஏ.அப்பாஸ், விஜயகுமார், கே.ராமநாதன், எஸ்.போஸ் ஆகியோருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



காந்திபுரம் பகுதிச் செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், பெரியகடை வீதி பகுதி-2 செயலாளர் வி.ஐ.பதுருதீன் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். மேலும், பெரிய கடைவீதி பகுதி-2, காந்திபுரம் பகுதிக்கழக, வட்டக்கழக அனைத்து நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...