கோவையில் திமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன

கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் புதிய கழக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று (ஜூலை 25) புதிய கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் இந்த அட்டைகளை வழங்கினார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவள விழா ஆண்டை முன்னிட்டு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



புதிய கழக உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து தலைமைக்குக் கொடுத்தவர்களுக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டன.



கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி, பெரிய கடைவீதி பகுதி-2, காந்திபுரம் பகுதி ஆகிய இடங்களைச் சேர்ந்த வட்டக்கழகச் செயலாளர்கள் நா.தங்கவேல், ஏ.அப்பாஸ், விஜயகுமார், கே.ராமநாதன், எஸ்.போஸ் ஆகியோருக்கு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



காந்திபுரம் பகுதிச் செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், பெரியகடை வீதி பகுதி-2 செயலாளர் வி.ஐ.பதுருதீன் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். மேலும், பெரிய கடைவீதி பகுதி-2, காந்திபுரம் பகுதிக்கழக, வட்டக்கழக அனைத்து நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...