பெண் குரலில் பேசி பிளஸ் 2 மாணவிக்கு காதல் தொல்லை: கோவையில் கல்லூரி மாணவர் கைது

கோவை குனியமுத்தூரில் பெண் குரலில் பேசி பிளஸ் 2 மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த 22 வயது கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளத்தில் தொடங்கிய இந்த சம்பவம் வீதியில் தொல்லையாக மாறியது.


Coimbatore: கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரின் 17 வயது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த மாணவி சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் ஒரு பெண்ணின் பெயரில் அவருக்கு நட்பு அழைப்பு வந்தது. மாணவியும் அந்த பெண்ணுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்.

பெண் என நினைத்து மாணவி அவருடன் பழகி வந்தார். அந்த நபர் பெண்ணின் குரலில் பேசி பழகியதால் மாணவிக்கு சந்தேகம் ஏற்படவில்லை. பின்னர், அவர் தான் பெண் இல்லை என்றும் தனது பெயர் ஜூனைத் (வயது 22) என்றும் ஒரு கல்லூரியில் படிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் மாணவியை காதலிப்பதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அவருடன் பேசுவதை தவிர்த்தார். ஆனால் ஜூனைத் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார். மாணவி பள்ளி செல்லும் வழியிலும், பல்வேறு இடங்களிலும் நின்று கொண்டு தொந்தரவு கொடுத்தார்.

சமீபத்தில், ஜூனைத் மாணவியின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, மாணவியின் தந்தை அவரை சந்தித்தார். ஜூனைத் அங்கிருந்து தப்பி ஓடும்போது அவரது செல்போன் கீழே விழுந்தது. அதில் மாணவியின் புகைப்படம் இருந்ததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கேட்டபோது, ஜூனைத் தந்தைக்கு மிரட்டல் விடுத்தார்.

இதனையடுத்து, மாணவியின் தந்தை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஜூனைத்தை கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...