கோவை ரமணீஸ் மயூரியில் பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை ரமணீஸ் மயூரியில் இரண்டு மாதங்களாக நடைபெறும் பாதாள சாக்கடை பணியால் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம். பணியை விரைவில் முடிக்க கோரிக்கை.


Coimbatore: கோயம்புத்தூர் துடியலூர் சரவணம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள ரமணீஸ் மயூரியில் பாதாள சாக்கடை பணி இரண்டு மாத காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணியால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பாதாள சாக்கடை பைப் புதைக்கப்பட்டு பள்ளங்கள் சரியாக மூடப்படாத நிலையில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக பள்ளங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு மிக சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் நடந்து செல்பவர்களும் மழை நீரில் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதாள சாக்கடை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் ரமணீஸ் மயூரி பகுதி பொதுமக்கள் இன்று (ஜூலை 25) கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பணி முடியும் வரை தற்காலிக நடவடிக்கையாக சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...