கோவை கருமத்தம்பட்டி அருகே வீட்டில் கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

கோவை கருமத்தம்பட்டி அருகே சென்னப்ப செட்டிபுதூரில் வீட்டில் தீ விபத்து. சமையல் அறையில் 37 வயது ஆண் கருகிய நிலையில் சடலமாக மீட்பு. மதுபோதையில் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம்.


Coimbatore: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சென்னப்ப செட்டிபுதூர் பகுதியில் நேற்று இரவு நடந்த தீ விபத்தில் ஒரு ஆணின் கருகிய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சகாய ஜெகன்ராஜ் (37) என்பவர் தனது மனைவியுடன் சென்னப்ப செட்டிபுதூர் பகுதியில் வசித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஜெகன்ராஜ், அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்ததால், மனமுடைந்த மனைவி சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

நேற்று ஜூலை 24 இரவு 10 மணிக்கு அளவில், ஜெகன்ராஜின் வீட்டில் இருந்து தீப்புகை வெளிவருவதை அக்கம்பக்கத்தினர் கவனித்தனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஜெகன்ராஜ் சமையல் அறையில் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜெகன்ராஜ் மதுபோதையில் வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், ஜெகன்ராஜ் தற்கொலை செய்தாரா அல்லது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா என்பது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்த உண்மை விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...