கோவையில் குற்றவியல் சட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு: தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் மத்திய தொழிற்சங்கங்கள் குற்றவியல் சட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிலாளர் நலன்களை பாதுகாக்க பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


கோவை: கோவையில் குற்றவியல் சட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ஜூலை 24 அன்று நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் முக்கியமானவை:

1. 17-வது நாடாளுமன்றத்தின் இறுதிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

2. 44 தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வேண்டும்.

3. தொழிலாளர் நலன்களைப் பாதுகாத்திட தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

4. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...