நிபா வைரஸ் அச்சம்: கோவை-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு; கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் காரணமாக கோவை-கேரளா எல்லையில் 11 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு. கோவை மண்டல கல்லூரிகளுக்கு கேரளா சுற்றுலா செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்.


கோவை: கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அண்மையில் கண்டறியப்பட்டதை அடுத்து, கோவை-கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை-கேரளா எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தா வளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், நர்சுகள் உள்ளிட்டோர் முழு கவச உடை அணிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கேரளாவில் இருந்து கோவை வரும் பஸ், ஆட்டோ, கார் உள்பட அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.

வாகனங்களில் வரும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, அதன்பிறகே அவர்கள் கோவை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களின் உள்ளேயும், டயர்களிலும் சானிடைசர் தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நிபா வைரஸ் எதிரொலியால் கோவை மண்டலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை இன்று ஜூலை 24 அனுப்பியுள்ளது. அதில் கல்லூரி மாணவ, மாணவிகளை கேரளாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...