அன்னூரில் 828 பயணாளிகளுக்கு ரூ.28.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டப்பேரவைத்தலைவர் ப.தனபால்

கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்தில் வருவாய் துறை சார்பாக தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. 



இவ்விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,

இப்பகுதி மக்கள் என்னிடம் அவினாசி- அத்திக்கடவு திட்டத்தை வழியுறுத்தியதன் அடிப்படையில் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிற்கு நிதி ஒதுக்கீடு பெற கருத்துரு அனுப்பியதோடு, தமிழக அரசு பணிகள் மேற்கொள்ள முதற்கட்டமாக 2017- 2018 நிதியாண்டில் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் மேற்கொள்ள இதே பகுதியில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகள் மேற்கொள்ள ரூ.3523 கோடிக்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வறட்சி பகுதிகளிலுள்ள ஏரிகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் நிரப்பி நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டு பாசன வசதிகளை மேம்படுத்தப்படும்.

வறட்சி காலங்களில் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சீரான முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், நிரந்தர தீர்வாக மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் வழியாக அவினாசிக்கு குடிநீர் வழங்க மூன்றாவது கூட்டு குடிநீர்த்திட்டம் அமைக்க திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இத்திட்டப்பணிகளானது ஒன்றறை ஆண்டுகள் முடிக்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும். இதுபோன்ற மக்களின் தேவைக்கான அனைத்து திட்டங்களும் உரிய முறையில் சரியான நேரத்தில் செய்து தரப்படும்" என்றார்.



இன்று நடைபெற்ற விழாவில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னனு குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இயற்கை மரண உதவித்தொகை, திருமண உதவித்தொகை என மொத்தம் 828 பயணாளிகளுக்கு ரூ.27.23 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்டம் வழங்கப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் மேல்கதவக்கரை, காக்காப்பாளையம், நல்லக்கவுண்டம்பாளையம், அருவங்காடு நால்ரோடு, ஜிஆர்ஜி கல்லூரி ஆகிய குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் விதமாக 6 புதிய   வழித்தடங்களை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற மக்களின் அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் பேசினார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் சுரேஷ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இ.கோவிந்த ராஜ், துணை மேலாளர் (வணிகம்) சாய் கிருஷ்ணன், அன்னூர் வட்டாட்சியர் ராஜன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...