கோவையில் ரோட்ஷோ நடத்திய மோடி, கோவை மெட்ரோ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை: எம்பி தயாநிதி மாறன்

பட்ஜெட் விவாதத்தில் திமுக எம்.பி தயாநிதி மாறன், கோவை மெட்ரோ திட்டம் தமிழக அரசே தான் செயல்படுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் மோடி அரசு ஒப்புதல் அளிக்காததை தாக்கினார்!


பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது திமுக எம்.பி தயாநிதி மாறன் பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

தயாநிதி மாறன் தனது பேச்சில், "கோவையில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடி, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் தரவில்லை" என்று குற்றம்சாட்டினார். மேலும், "ரஷ்யாவில் இருந்து பாதி விலைக்கு கச்சா எண்ணெயை வாங்கியபோதும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டினார். "தாம்பரம் - செங்கல்பட்டு உயர்மட்ட சாலைக்கு ஒப்புதல் தரப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு இதுவரை ஒதுக்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

இறுதியாக, "பிரதமர் மோடி வாக்களித்த மக்களுக்காக கூட பாடுபடவில்லை, கூட்டணிக் கட்சிகள் நலனை மட்டுமே கருத்தில் கொள்கிறார்" என்று தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டினார். இந்த விமர்சனங்கள் மூலம், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த திமுகவின் அதிருப்தியை அவர் வெளிப்படுத்தினார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...