பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா

பொள்ளாச்சியில், மனைவியின் அனுமதியின்றி சொத்து விற்கப்பட்டதாகக் கூறி, சார்பதிவாளர் அலுவலகத்தில் இரு குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டம் நடத்தினார். சொத்து விற்பனையை ரத்து செய்யக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: பொள்ளாச்சி ஆர் பொன்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யவாணி - சுரேஷ் தம்பதியினருக்கு இடையே சொத்து விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சமீப காலமாக கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்நிலையில், தாம் வசிக்கும் வீட்டை விற்க கணவர் சுரேஷ் முயற்சி செய்து வந்ததை அறிந்த மனைவி சத்யவாணி, கடந்த ஒன்பதாம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்தை விற்க தடங்கல் மனு அளித்திருந்தார். ஆனால், சார்பதிவாளர் அந்த மனுவை விசாரிக்காமல், கடந்த 12ஆம் தேதி வேறொரு நபருக்கு சொத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார்.



இதனை அறிந்த சத்யவாணி, தனது இரு குழந்தைகளுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சொத்து கிரயம் செய்ததை ரத்து செய்யக் கோரி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, கணவர் சுரேஷிடம் அசல் பத்திரத்தை கொண்டு வரச் சொல்லி சார்பதிவாளர் உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று சார்பதிவாளர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட சத்யவாணி அங்கிருந்து கலைந்து சென்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...