பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா

பொள்ளாச்சியில், மனைவியின் அனுமதியின்றி சொத்து விற்கப்பட்டதாகக் கூறி, சார்பதிவாளர் அலுவலகத்தில் இரு குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டம் நடத்தினார். சொத்து விற்பனையை ரத்து செய்யக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: பொள்ளாச்சி ஆர் பொன்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யவாணி - சுரேஷ் தம்பதியினருக்கு இடையே சொத்து விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சமீப காலமாக கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்நிலையில், தாம் வசிக்கும் வீட்டை விற்க கணவர் சுரேஷ் முயற்சி செய்து வந்ததை அறிந்த மனைவி சத்யவாணி, கடந்த ஒன்பதாம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்தை விற்க தடங்கல் மனு அளித்திருந்தார். ஆனால், சார்பதிவாளர் அந்த மனுவை விசாரிக்காமல், கடந்த 12ஆம் தேதி வேறொரு நபருக்கு சொத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார்.



இதனை அறிந்த சத்யவாணி, தனது இரு குழந்தைகளுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சொத்து கிரயம் செய்ததை ரத்து செய்யக் கோரி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, கணவர் சுரேஷிடம் அசல் பத்திரத்தை கொண்டு வரச் சொல்லி சார்பதிவாளர் உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று சார்பதிவாளர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட சத்யவாணி அங்கிருந்து கலைந்து சென்றார்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...