கோவை மாநகராட்சி 23வது வார்டில் புதிய பூங்கா திறப்பு: ஆணையாளர் திறந்து வைத்தார்

கோவை மாநகராட்சி 23வது வார்டில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் பல்லுயிர் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் திறந்து வைத்தார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இப்பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள 23வது வார்டு பி.எம்.ஆர். லே-அவுட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் பல்லுயிர் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (24.07.2024) திறந்து வைத்தார்.

விஜயலட்சுமி, ராமகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் முழு பங்களிப்புடன் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



இப்பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், சோலார் மின்விளக்குகள், குடிநீர் வசதி, ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சொட்டுநீர் பாசன வசதி மற்றும் நடைபாதை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இப்பூங்காவில் இடம்பெற்றுள்ளன.



பூங்காவை திறந்து வைத்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன், "இப்பூங்காவினை சிறந்த முறையில் அமைத்துத் தந்த தன்னார்வலருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதி பொதுமக்கள் இப்பூங்காவினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் கிழக்கு மண்டல குழுத்தலைவர் திருமதி இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் திருசித்ரா மணியன், உதவி ஆணையர் திரு முத்துச்சாமி, விஜயலட்சுமி-ராமகிருஷ்ணன் டிரஸ்ட் நிறுவனர் திரு ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் திருமதி உஷா ராணி, ஒருங்கிணைப்பாளர் திரு பாலகிருஷ்ணன், செயற்பொறியாளர் திரு கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு ராஜேஷ், உதவி பொறியாளர் திரு குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...