கோவை நியூசித்தாபுதூரில் வீட்டின் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணம் கொள்ளை

கோவை நியூசித்தாபுதூர் பகுதியில் வாடகை வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.4,300 பணம் திருடப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நியூசித்தாபுதூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு செல்போன்கள் மற்றும் ரூ.4,300 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி சாவித்திரி, கோவை நியூசித்தாபுதூர் கே.கே.நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனியார் மருத்துவமனையில் தூய்மைத் தொழிலாளராக பணிபுரியும் சாவித்திரி, திங்கள்கிழமை இரவு வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கைப்பேசிகள் மற்றும் ரூ.4,300 பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சாவித்திரி ஜூலை 23 அன்று ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...