உடுமலை அரசு கலைக் கல்லூரியில் நாளை இறுதி கட்ட கலந்தாய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள 55 இடங்களுக்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை (25.01.2024) நடைபெறுகிறது. புதிய மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளில் சேர்வதற்கான இறுதி கட்ட கலந்தாய்வு நாளை (25.01.2024) நடைபெற உள்ளது. கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி இது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

கல்லூரியில் 14 இளநிலைப் பாடப்பிரிவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்றது. மொத்தமுள்ள 864 இடங்களில் 809 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 55 இடங்களை நிரப்புவதற்காக இந்த இறுதி கட்ட கலந்தாய்வு நடத்தப்படுகிறது.



இந்த கலந்தாய்வில் பின்வரும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்:

1. ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கலந்து கொள்ள இயலாதவர்கள்

2. கலந்தாய்வுக்கு வருகைபுரிந்தும் சேர்வதற்கு வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவர்கள்

3. புதிதாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள்

4. இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காதவர்கள்

இதுவரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காதவர்கள் 24.01.2024 அன்று கல்லூரிக்கு நேரடியாக வந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, அடுத்த நாள் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

கலந்தாய்வில் பங்குபெற வரும் மாணவர்கள் பின்வரும் ஆவணங்களை கொண்டு வர வேண்டும்:

- அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் மூன்று நகல்கள்

- உரிய கல்விக் கட்டணம்

- இணையதளத்தில் பதிவேற்றம் செய்த விண்ணப்ப நகல்

மாணவர்கள் தங்கள் பெற்றோரை உடன் அழைத்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு கல்லூரியின் www.gacudpt.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...