கோவை - லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

கோவையில் இருந்து புறப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் பொறியியல் பணிகள் காரணமாக இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இரயில் காலை 11 மணிக்கு புறப்படும்.


Coimbatore: கோவையில் இருந்து புறப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் இரயில் இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி எண் 11014, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாகச் செல்லும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் இன்று ஜூலை 24 காலை 8.50 மணிக்கு கோவை ஜங்சனில் இருந்து புறப்படுவதாக இருந்தது.

ஆனால், பொறியியல் பணிகள் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமதம் இன்று ஒரு நாள் மட்டுமே என்றும், வழக்கமான அட்டவணைப்படி நாளை முதல் இரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...