கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து; ரூ.1 கோடி நன்கொடை

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இளைஞர் நலனுக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார்.


கோவை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இளைஞர் நலனுக்காகவும் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் பலவிதமான திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளை டாக்டர் நல்ல பழனிசாமி பாராட்டினார். இளைஞர்களின் திறனை தூண்டும் பலவிதத் திட்டங்களுக்காக KMCH சார்பிலும், Dr NGP Institute சார்பிலும், ரூ. 1 கோடி நன்கொடையாக அளித்தார்.

இந்த சந்திப்பின் போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு கோவை மக்கள் சார்பில் டாக்டர் நல்ல பழனிசாமி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின்போது கேஎம்சிஹெச் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி எஸ். கார்த்திகேயன் உடனிருந்தார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை முன்னிட்டும், புற்றுநோய் முதலான நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கேஎம்சிஹெச் மருத்துவமனை வருடங்களுக்கு மேலாக மாரத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...