ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்: ரூ.13.99 லட்சத்திற்கு விற்பனை

ஆனைமலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற கொப்பரை ஏலத்தில், 432 மூட்டைகள் ரூ.13.99 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் தர கொப்பரை கிலோவிற்கு ரூ.92.59 வரை விலை பெற்றது.


கோவை: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் முதல் தரம் மற்றும் இரண்டாம் தரம் என இரு வகையான கொப்பரை மூட்டைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன. முதல் தர கொப்பரையில் 162 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. இவை கிலோவிற்கு ரூ.87.69 முதல் ரூ.92.59 வரை விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரையில் 270 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. இவை கிலோவிற்கு ரூ.43.43 முதல் ரூ.81.21 வரை விலை பெற்றன.

இந்த ஏலத்தில் மொத்தம் 194.40 குவிண்டால் கொப்பரை விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ.13.996 லட்சம் ஆகும். இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் செந்தில்முருகன் தெரிவித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...