கோவையில் அழகு கலை பயிற்சியளிப்பதாக பணம் வாங்கி முறையாக கற்றுத் தராததால், கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
Professional beautician என்ற அழகு கலை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனம், ஐ திரைப்படத்தில் அழகு கலை நிபுணராக வரும் நடிகை ஒஜாஸ் ராஜானி கொண்டு அழகு கலை குறித்து பயிற்சி அளிக்க உள்ளதாக கூறி அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து கோவை,திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர், அவர்களிடமிருந்து கட்டணமாக 1500 முதல் 2500 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் அந்த நிறுவனம் அறிவித்த படி போதுமான இட வசதிகள் இல்லாமலும், ஒரே அறையில் 400 நபர்களை அமர வைத்துள்ளனர். இதனால் பயிற்சிக்கு வந்த பெண் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தனியாக அமர வைத்ததாக தெரிவித்தனர், மேலும் காலை முதல் ஒரே ஒரு வகுப்பு மட்டுமே எடுத்ததாகவும் அங்கு வந்த பெண்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் தங்களிடம் பெற்ற பணத்தில் ஆயிரம் ரூபாயாவது திருப்பி தர வேண்டும் என ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சரண்யா 500 ரூபாய் பணத்தை திருப்பி தருவதாக கூறினார், ஆனாலும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ரகளையில் ஈடுபட்டனர், இதை அடுத்து போலிஸார் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Professional beautician என்ற அழகு கலை தொடர்பான கருத்தரங்கம் மற்றும் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனம், ஐ திரைப்படத்தில் அழகு கலை நிபுணராக வரும் நடிகை ஒஜாஸ் ராஜானி கொண்டு அழகு கலை குறித்து பயிற்சி அளிக்க உள்ளதாக கூறி அறிவிப்பை வெளியிட்டது. இதை அடுத்து கோவை,திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர், அவர்களிடமிருந்து கட்டணமாக 1500 முதல் 2500 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் அந்த நிறுவனம் அறிவித்த படி போதுமான இட வசதிகள் இல்லாமலும், ஒரே அறையில் 400 நபர்களை அமர வைத்துள்ளனர். இதனால் பயிற்சிக்கு வந்த பெண் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தனியாக அமர வைத்ததாக தெரிவித்தனர், மேலும் காலை முதல் ஒரே ஒரு வகுப்பு மட்டுமே எடுத்ததாகவும் அங்கு வந்த பெண்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் தங்களிடம் பெற்ற பணத்தில் ஆயிரம் ரூபாயாவது திருப்பி தர வேண்டும் என ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சரண்யா 500 ரூபாய் பணத்தை திருப்பி தருவதாக கூறினார், ஆனாலும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ரகளையில் ஈடுபட்டனர், இதை அடுத்து போலிஸார் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.