வன உயிரினங்கள் உயிரிழப்பை தடுக்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வெடிபொருள், மின்சாரம் காரணமாக வன உயிரினங்கள் உயிரிழப்பதை தடுக்க மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வன உயிரினங்கள் வெடிபொருள்/அவுட்டுக்காய் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் நிகழ்வுகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் ஜூலை 22 அன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் வனக்களப்பணியாளர்கள் மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக வனங்களை ஒட்டி உள்ள பகுதியில் கூட்டுத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தணிக்கையின் போது தாழ்வாக உள்ள மின் கம்பிகள் மற்றும் சாய்வான சேதமடைந்த மின்கம்பிகள் கண்டறியப்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளன.



கடந்த ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2024 வரை சுமார் 2000 எண்ணிக்கையிலான தாழ்வான மின் கம்பிகள் மற்றும் சேதமடைந்த சாய்வான மின்கம்பங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், முற்றிலும் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனங்களை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் உள்ள மின்வேலிகளையும் மின்வாரிய பணியாளர்களுடன் ஆய்வு செய்து, அனுமதிக்கப்பட்ட அளவிலான மின்னழுத்தம் பயன்படுத்தப்படுகிறதா என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.



கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட வனச்சரகங்களில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அவுட்டுக்காய் (நாட்டு வெடி) பயன்படுத்தி வனஉயிரினங்கள் வேட்டையாடுவதைத் தவிர்க்க காவல் துறையுடன் இணைந்து தொடர் களத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஓராண்டில் அவுட்டுக்காய் பயன்படுத்தி வேட்டையாடிய குற்றத்திற்காக 6 வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவுட்டுக்காய் பயன்படுத்தியதற்காக வெடிபொருள் கையாண்ட குற்றத்திற்காக காவல் துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு மற்றும் தொழிற்துறை பாதுகாப்பு குழுக்கூட்டமும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீ மற்றும் தொழில்துறை பாதுகாப்பு தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறையின் அமலாக்கத்தைக் கண்காணிக்கவும், தீ விபத்துகளைத் தடுப்பது குறித்து உரிமம் வைத்திருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தீ விபத்துகளைத் தடுப்பதற்கும் தணிப்பதற்கும் சமூகப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...