கோவையில் இரவு நேர மது விற்பனையை தடுக்க கோரி இந்து மக்கள் கட்சி மனு

கோவையில் இரவு நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுவதை தடுக்க கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் மனு அளித்தது. இரவு 10 மணிக்கு மேல் மது விற்பனை நடப்பதாக குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்க கோரி இந்து மக்கள் கட்சியின் கோவை மாவட்ட பொதுச் செயலாளர் சூர்யா தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள்:

கோவை மாநகர மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகளில் இரவு 10 மணிக்கு மேலும் மது விற்பனை செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக வழக்கமாகி உள்ளது. மதுபான விற்பனை மையங்களில் உள்ளேயே பல கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் நடைபெறும் பல குற்ற நிகழ்வுகளுக்கு மதுவே முதல் காரணமாக உள்ளது. கொலை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பலரும் மதுவின் பிடியிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரவு நேர மது விற்பனையால் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இரவு வந்து சேரும் வெளி மாவட்ட மற்றும் உள் மாவட்ட பயணிகள் இல்லங்களுக்கு சென்று சேருவது மிகப்பெரும் சவாலாக உள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்:

1. கோவை மாநகரை அச்சுறுத்தும் இரவு நேர மது விற்பனையை காவல்துறை உடனடியாக தடுக்க வேண்டும்.

2. இரவு நேரங்களில் மதுக்கடைகளைச் சுற்றி அதிக நேரம் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.

3. மது கடைகளின் எதிரில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் விற்கப்படும் மதுவை பெருமளவில் தடுக்க முடியும்.

4. முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் சாலை சமிக்ஞை விளக்குகள் உள்ள பகுதிகளில் காவல்துறையின் கண்காணிப்பு CCTV இயங்குவது போல, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரேயும் கண்காணிப்பு CCTV பொருத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் இந்த முன்மொழிவுகளை பரிசீலிக்குமாறு இந்து மக்கள் கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...