தாராபுரம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பஞ்சாயத்துகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முத்து கவுண்டன் பாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நந்தவனம்பாளையம், கொக்கம்பாளையம், முத்தியம்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பஞ்சாயத்துகளுக்கான இந்த முகாம் மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் நான்காவது மண்டல குழு தலைவருமான இலா. பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.



இந்த முகாமில் மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முகாம் அமைத்தன. இதன் மூலம் மக்கள் ஒவ்வொரு அலுவலகமாக செல்லாமல் ஒரே இடத்தில் தங்கள் குறைகளை பதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமை ஆய்வு செய்த போது, பல்வேறு துறைகளின் அதிகாரிகளிடம் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமும் நேரடியாக பேசி, அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...