ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் அரசுப் பள்ளியில் புதிய கழிப்பறை கட்டிடம் திறப்பு


ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஷேன் டியகோ டௌவுன்டவுன் பிரேக்பாஸ்ட், யுஎஸ்ஏ சார்பில் சுவட்ச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி கட்டப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை, அசோகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளயில் கழிப்பறை கட்டப்பட்டு அதனை கோவை ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் பிரகாஷ் சந்திரன் திறந்து வைத்தார்.

இது குறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார் கூறுகையில்; உலகளாவிய மானியத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கு கழிப்பறை திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு ரோட்டரி இன்டெர்நேஷ்னல் தலைமையகம் மூலம் 50 சதவீதம் நிதி வழங்கப்பட்டது. இதுவரை ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் 10 அரசுப் பள்ளிகளுக்கு 65 லட்சம் செலவில் கழிப்பறை வசதி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதிக்கு முழுமையாக தண்ணீர் வசதி போன்றவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



இதனை பராமரிப்பு மற்றும் மேற்பார்வையிட ஒவ்வொரு மாதமும் ரோட்டரி குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அதன்பிறகு பி.எஸ்.ஜி மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்த பள்ளி கூடங்களுக்கும் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுக்க முடுவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற திட்டங்களுக்கு ரோட்டரி இன்டெர்நேஷ்னல் தலைமையகம் உதவி வருகிறது. அவர்களுக்கு இந்த திட்டத்தை பற்றிய தகவல் 6 மாதத்திற்கு ஒருமுறை ரிப்போர்ட் அனுப்பும் வகையில் 5 ஆண்டுகளுக்கு இந்த கழிப்பறை வசதிகள் பராமரிக்கப்பட்டு வரும். இதுபோன்ற திட்டங்களுக்கு பள்ளிகளில் இருந்தும் மிகுந்த ஆதரவு கிடைக்கிறது என்றார்.



இதில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் குரூப்தீப் சிங், உதவி ஆளுநர் மாரப்பன், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...