கோவையில் ஆடிட்டரை கடத்தி 10 லட்சம் பறித்த மூவர் கைது; ஒருவர் தலைமறைவு

கோவையில் ஆடிட்டர் பின்சி லாசரஸ் போஸை கடத்தி 10 லட்சம் ரூபாய் மற்றும் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய சூத்திரதாரி பிருந்தா தலைமறைவாக உள்ளார்.


கோவை: கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த ஆடிட்டர் பின்சி லாசரஸ் போஸ் (48) கடந்த மாதம் தனது முகநூல் பக்கத்தில் ஹோட்டல்கள் குத்தகைக்கு தேவை என்று விளம்பரம் செய்திருந்தார். இதைப் பார்த்த பிருந்தா என்பவர் தொடர்பு கொண்டு, தேனி மாவட்டத்தில் மலைப் பகுதியில் ஹோட்டல் ஒன்று குத்தகைக்கு இருப்பதாகக் கூறினார்.

பிருந்தாவின் கோரிக்கையின் பேரில், பின்சி லாசரஸ் போஸ் 10 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து கொண்டார். நேற்று முன்தினம், பிருந்தாவின் நண்பர்கள் என்று கூறப்பட்ட மூன்று நபர்களுடன் பின்சி லாசரஸ் போஸ் காரில் புறப்பட்டுச் சென்றார்.

ஜீவா நகர் பகுதியில் உள்ள காலி இடத்தின் அருகே காரை நிறுத்திய அந்த மூவரும், கத்தியைக் காட்டி மிரட்டி பின்சி லாசரஸ் போஸிடமிருந்த 10 லட்ச ரூபாய் பணத்தையும், அவர் கழுத்தில் அணிந்திருந்த 4¼ பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டனர். பின்னர் அவரை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து பின்சி லாசரஸ் போஸ் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (38), அஸ்வின் (29) மற்றும் கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜின்சன் (37) ஆகிய மூவரையும் நேற்று (ஜூலை 19) காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணம், 4¼ பவுன் தங்கச் சங்கிலி, மூன்று கைபேசிகள், கத்தி மற்றும் ஆடிட்டரை கடத்தப் பயன்படுத்திய கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான பிருந்தா தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...