கோவையில் அடிப்படை வசதிகள் கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கோவை மாநகராட்சியின் 84வது வார்டில் அடிப்படை வசதிகள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை வசதிகள் கோரி போராட்டம் நடத்தினர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 84வது வார்டில், அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு செய்வதற்காக வந்த அரசு அதிகாரிகளை, குடியிருப்பு வாசிகள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சியின் 84வது வார்டில் உள்ள ஜிஎம் நகர், கோட்டை புத்தூர் ஜமீன்தார் நகர், வைரம் நகர், வீரபாண்டி நகர், கல்லுக்குழி, சன் கார்டன், என்எஸ் கார்டன், ரோஜா கார்டன், காந்திநகர், ஜன்னத்துல் பிர்தௌஸ் கார்டன், கேஎஸ் பார்க் போன்ற பகுதிகளில் சாலை வசதி, மழை நீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.



இந்நிலையில் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இன்று நேரில் வந்தனர். அப்போது அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட குடியிருப்பு வாசிகள், அவர்களை கையோடு அழைத்துச் சென்று சேதமடைந்த சாலைகள் மற்றும் கால்வாய்களை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் 88வது வார்டு எஸ்டிபிஐ கவுன்சிலர் வீட்டின் முன்பாக பொதுமக்கள் கூடவே, அங்கு கவுன்சிலரின் ஆதரவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அடிப்படை வசதிகள் அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...