மார்ச்சநாயக்கன்பாளையம், தலக்கரை துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை

பொள்ளாச்சி மார்ச்சநாயக்கன்பாளையம் மற்றும் தலக்கரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஜூலை 18 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.


கோவை: பொள்ளாச்சி மார்ச்சநாயக்கன்பாளையம் மற்றும் தலக்கரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை ஜூலை 18 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது:

எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியபோது, தீவன்சபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி.

தலக்கரை துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது:

முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன்நகர், ஜே.ஜே.காலனி.

பொதுமக்கள் இந்த மின்தடை குறித்து அறிந்து கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...