மேட்டுப்பாளையம் பகுதி பேருந்துகளில் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை-மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை-மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் பேருந்துகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஜூலை 17 அன்று காரமடை டீச்சர்ஸ் காலனி அருகே சோதனை நடத்தினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் மினி பேருந்துகள் ஆகியவற்றில் இந்த திடீர் ஆய்வு நடைபெற்றது.

ஆய்வுக்குப் பின்னர், அதிகாரிகள் பயணிகளிடம் முக்கிய அறிவுரைகளை வழங்கினர். பேருந்து ஓட்டுனர்கள் அதிவேகமாக ஓட்டுதல், செல்போனில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்குதல், நடத்துனர் பயணிகளை படியில் தொங்கும்படி அனுமதித்தல், ஏர் ஹாரன் அல்லது மியூசிக்கல் ஹாரன் பயன்படுத்துதல், போநட் (Bonnet) அதாவது என்ஜின் மேற்பகுதியில் யாரையாவது அமரவைத்து செல்லுதல் போன்ற விதிமீறல்களை கண்டால், பயணிகள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து RTO அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு புகார் அளித்தால் ஒரு மணி நேரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...