உடுமலை அருகே பால் வண்டி தீப்பிடித்து எரிந்து நாசம் - ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிர் தப்பினர்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நான்குவழிச் சாலையில் பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் நான்குவழிச் சாலையில் பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில், பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த பால் வண்டி திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடுமலை தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் கடுமையாக போராடி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். எனினும், பால் வண்டி முற்றிலும் எரிந்து நாசமாகியது.

முதற்கட்ட விசாரணையில், பால் வண்டியின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்துக்கு காரணம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.



நல்ல வேளையாக, தீ விபத்து ஏற்படுவதற்கு முன் வாகனத்திலிருந்து புகை வருவதை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உடனடியாக கீழே இறங்கி விட்டனர். இதனால் இருவரும் உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...