அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு: பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு

உடுமலை அருகே அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர், மறையூர் ஆகிய பகுதிகளில் இடைவிடாத கனமழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி, அமராவதி அணைக்கு வினாடிக்கு 7,100 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.



மறையூர் கோவில் கடவு பகுதியில் உள்ள பாம்பாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வனப்பகுதியில் இருந்தும் அமராவதி அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமராவதி அணையின் நீர்மட்டம் 75.14 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடி ஆகும்.



இந்நிலையில், அமராவதி அணை பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...