சிறு, நடுத்தர வணிகங்களை வலுப்படுத்த புதிய முயற்சியில் மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பம்

கோயமுத்தூரில் உள்ள சிறு, நடுத்தர வணிகங்களில் மாற்றத்தை ஏற்படுத்த மைக்ரோசாப்ட் இன்டியா, கிளவுட்(cloud) அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை வழங்க உள்ளது. இந்திய தரவு மையங்களில் உதவியுடன் மைக்ரோசாப்ட் அசுர், ஆபிஸ் 365, சிஆர்எம் ஆன்லைன் மற்றும் பேரிடர் மீள் சேவை போன்றவைகளை பயன்படுத்தி மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பம் இயங்குவதை பற்றி கோவை நகரில் உள்ள இரண்டு வணிக நிறுவனங்களான பயோலைன் ஆய்வகம், மான்ட்ப்ளூ தொழிநுட்பம் விளக்கியுள்ளன.



இந்தியாவில் உள்ள சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் மையத்தை 50%க்கும் மேலாக பயன்படுத்தும் 8 மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. பயோலைன் பரிசோதனை மையமானது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட மையங்கள் இணைந்து செயல்படுகின்றன. இதுபோன்றே மான்ட்ப்ளூ தொழிநுட்பம் நிறுவனம் ஆபீஸ் 365 பயன்படுத்தி வணிகத்தை ஒருங்கிணைந்து, வணிகத்தை மேம்படுத்தியுள்ளது. இத்தகைய வசதியால், சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை பிரிவு 25% விற்பனையை அதிகரிக்கும்.

இது பற்றி மைக்ரோசாப்ட் இன்டியா எஸ்எம்பி வணிக தலைவர் மணிஷ் ஷர்மா கூறுகையில்; எங்களது கிளவுட் தொழில்நுட்பத்தை சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன்படுத்துவதால், சர்வதேச வாய்ப்புகளை பெற்றுள்ளன. இந்த வணிகத்தை சக்தியுள்ளதாக மாற்றும் வகையில் சரியான தீர்வுகளை புதுமையாகவும், வளர்ச்சிக்கு உகந்தவையாகவும் மைக்ரோசாப்ட் அளிக்க கடமைப்பட்டுள்ளது. சிறு, நடுத்தர தொழில் வணிக அமைப்பானது, வணிக மாதிரிகளை உருவாக்குவதோடு மற்றும் தேவையான மாற்றங்களை குறைவான விலையில் அமைத்து தருகிறது. 

வாடிக்கையாளர்கள், வணிகத்தின் அளவை உயர்த்துவதோடு அதன் நோக்கத்தையும் நிறைவேற்ற உதவுகிறது. இந்தியாவில் சிறு வணிக நிறுவனங்கள் அதிக அளவில்  உள்ள நகரமாக கோயமுத்தூர் திகழ்கிறது. கிளவுட் தொழில்நுட்பத்தால் நோயாளிகளை நன்கு கவனிப்பதில் பயோலைன் ஆய்வகம் சிறப்பாக செயல்படுகிறது. மான்ட்ப்ளு தொழில்நுட்பம், வேலைத்திறனை முழுமையாக பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்துள்ளது. என்றார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...