காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் களப்பணி

காட்டம்பட்டி குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மியாவாக்கி அடர்வனத்தில் உடைப்பு சீரமைப்பு, தூர்வாரும் பணி மற்றும் கரை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றினர்.


கோவை: கோவையில் உள்ள காட்டம்பட்டி (கடத்தூர்) குன்னத்தூர் குளத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் முக்கிய களப்பணிகள் நடைபெற்றன.



இரண்டாம் கட்டமாக Zahoransky Moulds & Machines Pvt Ltd நிறுவனத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மியாவாக்கி அடர்வனத்தில் உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.



அதேசமயம், ஸ்ரீபண்ணாரி அம்மன் சுகர்ஸ் மற்றும் சிவா டிஷ்டில்லரிஸ் நிறுவனங்களின் CSR நிதியுதவியுடன் நடைபெறும் தூர்வாரும் பணியில் எடுக்கப்படும் மண் கொண்டு கரை அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



மேலும், குளத்தின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிகளை மாற்றியமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.



இந்த பணிகள் அனைத்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் ஜூலை 14 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...