பொள்ளாச்சியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட விசிக பிரமுகர் உள்பட 10 பேர் கைது: ரூ.2.70 லட்சம் பறிமுதல்

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் வீட்டில் நடந்த சூதாட்டத்தில் விசிக கோவை, நீலகிரி மண்டல துணை அமைப்பாளர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் ரூ.2.70 லட்சம், மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று கார்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் சூதாட்டம் நடைபெற்றதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் நடத்திய திடீர் சோதனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) பிரமுகர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள வெங்கடாசலம் என்பவரின் வீட்டிற்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திடீரென போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.



உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப் பணம், மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று கார்களை பறிமுதல் செய்தனர்.



கைது செய்யப்பட்டவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை, நீலகிரி மண்டல துணை அமைப்பாளர் பிரபு, கார்த்திகேயன், மணிகண்டன், கணேஷ் பாபு ஆகியோர் அடங்குவர். மொத்தம் 10 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...