பொள்ளாச்சி ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். வனத்துறை அருவியில் குளிக்க தற்காலிக தடை விதித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஆழியார் கவியருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் அருவியில் குளிப்பதற்கு தற்காலிக தடை விதித்துள்ளனர்.

விடுமுறை நாட்களில் ஆழியார் கவியருவிக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.



இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை 7:00 மணி முதலே சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வந்து குவிந்தனர். வனத்துறை அதிகாரிகளும் வழக்கம் போல சுற்றுலா பயணிகளை அருவியில் குளிக்க அனுமதித்தனர்.



எனினும், சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது, காலை 9 மணி அளவில் திடீரென கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியிலிருந்து அதிக அளவில் நீர் கொட்டத் தொடங்கியதை அடுத்து, வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்களை அவசரமாக வெளியேற்றினர்.



இதனைத் தொடர்ந்து, அருவியில் நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் ஆழியார் கவியருவியை தற்காலிகமாக மூடியுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் திரும்பிச் செல்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...