அலுமினியக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யும் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி

தொழிற்கூடங்களின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை, அலுமினியக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்கிறது. இந்த ஆராய்ச்சிப் பணிக்கு டிஎஸ்டி (அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை) என்னும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், டிஎஸ்டி (தொழில்நுட்ப புத்துருவாக்க திட்டம்) திட்டத்தின் கீழ் அனுமதியும் ரூ.1 கோடியே 18 லட்சம் நிதியுதவியும் வழங்கியுள்ளது. 

இந்த நிதித்தொகை, மேற்சொல்லப்பட்ட ஆராய்ச்சிப் பணிக்காகச் செலவிடப்படுகிறது. சிஎஸ்ஐஆர் (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்) – என்ஐஐஎஸ்டி, திருவனந்தபுரம் என்ற ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

ஆராய்ச்சிப் பணியின் முக்கிய அம்சங்கள்:-

  1. அலுமினியக் கழிவுகளை உருக்குவதற்கும் சுத்தப்படுத்துவதற்கும் வேண்டிய உபகரணங்களை அமைத்தல்.
  2. அலுமினியம் மற்றும் ஏனைய தனிமங்களின் அளவு விகிதம் குறித்த பரிசோதனை.
  3. அலுமினிய உலோகக் கலவையை மறுசுழற்சி செய்வதில் அறிந்து கொள்ளவிருக்கும் தொழில்நுட்பத் தகவல்கள்.


இந்தப் பணியின் ஆரம்ப நிலையாக தரமான அலுமினியத்திற்காக, தனிமத்தைச் சுத்தப்படுத்துதல், உலரவைத்தல் மற்றும் பொறுத்தமான ஊக்கிகளைக் கலக்குதல் என்னும் வரிசை முறையை முன்வைக்கிறது.

 

தொழிற்கூட அடிப்படை உபகரணங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. எஸ்என்ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டி முதன்மை செயல் அலுவலர் ராமகிருஷ்ணா, ரூட்ஸ் குழுமத்தின் சேர்மன் கே.இராமசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த அலுமினிய மறுசுழற்சி மையம் துவக்கப்பட்டது.

 



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர் பேசும் போது, இன்றைய கால சூழ்நிலையில் அடிப்படை மற்றும் அறிவு சார்ந்த ஆராய்ச்சி மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. இவை அனைத்தும் சிறு தொழில்கள் துவங்குவதற்கும் மாணவர்களின் எதிர்கால ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பிற்கும் உறுதுணையாக இருக்கும்.

இதற்கு சரியான ஊக்குவிப்பும், சரியான பயிற்சியும் தேவையானதாக கருதப்படுகிறது. சிறிது காலமே தேவைப்பட்டாலும், பொறியாளர்கள் ஆராய்ச்சி மூலக்கூறுகளை கண்டறிந்து நிபுணத்துவம் பெற்று புதிய கண்டுபிடிப்பினை உலகிற்கு படைக்க வேண்டும்" என்று கூறினார்.

 

இவ்விழாவில் கொடிசியா தலைவர் வி.சுந்தரம், கொடிசியா துணைத்தலைவர் வி.திருஞானம், ரூட்ஸ் காஸ்ட் லிட் இயக்குநர் ஓ.ஏ.பாலசுப்ரமணியம், கொடிசியா முன்னாள் தலைவர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கல்வி இயக்குநர் எ.எபினேசர் ஜெயக்குமார் அணிந்துரை வழங்கினார். பேராசிரியரும் துறைத் தலைவருமான பி.கருப்புசாமி ஆராய்ச்சிப் பணியை விளக்கிப் பேசினார். இறுதியாக கல்லூரி முதல்வர் என்.எ.அலமேலு நன்றியுரை வழங்கினார். 

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...