வட இந்திய கும்பல் படுகொலைகளை கண்டித்து கோவையில் SDPI கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை உக்கடம் அருகே, வட இந்தியாவில் தொடரும் கும்பல் படுகொலை மற்றும் அராஜகங்களை கண்டித்து SDPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட துணைதலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Coimbatore: வட இந்தியாவில் தொடரும் கும்பல் படுகொலை மற்றும் அராஜகங்களை கண்டித்து SDPI கட்சி நடத்தும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மத்திய மாவட்டம் சார்பாக உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூலை 12 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைதலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். SDPI கட்சியின் மாநில செயலாளர் ராஜா உசேன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் முஸ்தபா, மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர், மாவட்ட செயலாளர்கள் முகமது இசாக் மற்றும் மன்சூர் அலி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், வர்த்தக அணி மாவட்ட தலைவர் இப்ராகிம், தொழிற்சங்க மாவட்ட தலைவர் சைய்யது, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அப்பாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாவட்டசெயற்கு உறுப்பினர்களான சைபுதின், ஹனீப்கான், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பஷீர் ஆகியோரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவி காமிலா பானுவும் இதில் கலந்து கொண்டார்.

SDPI கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். வட இந்தியாவில் நடைபெறும் கும்பல் படுகொலைகள் மற்றும் அராஜக செயல்களை கடுமையாக கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...