பொள்ளாச்சி அருகே கராச்சேரி மாகாளியம்மன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி அருகே கராச்சேரியில் உள்ள பழமையான மாகாளியம்மன் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்று நாட்கள் சிறப்பு யாகங்கள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கராச்சேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த விநாயகர், பாலமுருகன், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த 8-ஆம் தேதி விநாயகர் பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா, மூன்று நாட்கள் பல்வேறு சிறப்பு யாகங்கள் மற்றும் ஹோமங்களுடன் தொடர்ந்தது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வில், சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த பின்னர், புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தங்கள் தலையில் சுமந்தபடி, மலர்கள் தூவப்பட்டு கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.



கோபுரத்தின் உச்சியில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர், பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

இந்த முக்கிய நிகழ்வில் பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். மேலும், கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று, இந்த புனித நிகழ்வை கண்டு வழிபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...