குறிச்சி பகுதியில் தொடரும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகோரி மாநகராட்சி அணையரிடம் மனு

கோவை மாவட்டம், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94 முதல் 100 வரையிலான வார்டுகளை உள்ளடக்கிய குறிச்சி பகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைக்கு உடனடி தீர்வுகாணக் கோரி திமுக குறிச்சி பகுதி செயலாளர் நா.பிரபாகரன் தலைமையிலான திமுக-வினர் மாநகராட்சி அணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

குறிச்சி நகராட்சியானது கோவை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகும், ஆழியார் மற்றும் சிறுவாணி, பில்லூர் குடிநீர் திட்டங்கள் இருந்தும் தற்போது குறிச்சி பகுதியில் 25 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை 25 நாட்களுக்கும் மேலாக சேமித்து உபயோகப்படுத்துவதால் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோவை மாநகராட்சியின் மற்ற வார்டுகளில் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மாநகராட்சியின் மற்றப்பகுதிக்கு குடிநீர் வழங்குவதைப் போலவே குறிச்சி பகுதிக்கும் நீர் விநியோகம் செய்ய வேண்டும். 

மேலும், 3 நாட்களுக்கு ஒருமுறை வழக்கப்பட்டு வந்த கிணற்றுநீரும் தற்போது காலம் தாழ்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அத்யாவசியத் தேவைக்கும் கூட நீரின்றி சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையே, லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீரையும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசியல் ஆதாயம் கருதி தங்களுக்கு வேண்டிய பகுதிகளுக்கு மட்டும் விநியோகம் செய்கின்றனர்.

அதேப்போல குறிச்சி பகுதியில் சுகாதாரம் மிகவும் மோசமடைந்து உள்ளது. போதுமான அளவு சுகாதாரப் பணியாளர்கள் இல்லாமல் துப்புரவு பணி மற்றும் வடிகால் சுத்தப்படுத்தும் பணி உள்ளிட்ட சுகாதார பணிகள் மந்தமாகவும், சரியான முறையிலும் நடைபெறாமல் உள்ளது. இதன் காரணமாகவும், தொற்றுநோய்கள் பரவுகின்றன. எனவே, சுகாதார பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேணடும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கோவை பொள்ளாச்சி சாலையில் ஈச்சனாரி ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் மேம்பாலத்தில் தெருவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சாலை விபத்துகள் அதிகப்படியாக ஏற்பட்டு வருகிறது. உடனடியாக மேம்பாலத்தில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

மேலும், குறிச்சி பகுதியிலும் பெரும்பாலான தெருவிளக்குகள் எரியாமல் பயனற்று உள்ளது. அதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிச்சி பகுதி திமுக செயலாளர் பிரபாகரன், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களுக்கு அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...