பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் 26 கட்டிடங்களுக்கு சீல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அரசு விதிகளை மீறிய 26 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் அரசு விதிகளை மீறிய 26 கட்டிடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டது.

மகாலிங்கபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் வணிக கட்டிடங்களும் உள்ளன. இவற்றில் பல கட்டிடங்கள் வணிக பயன்பாட்டு அனுமதி பெறாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



வழக்கை விசாரித்த நீதிபதிகள், விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, இன்று கடைகளுக்கு சீல் வைக்க வந்த நகராட்சி பொறுப்பு ஆணையாளர் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகளை மகாலிங்கபுரம் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.

பின்னர் அங்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மொத்தம் 66 கடைகளுக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் 40 கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றுள்ளனர். எனவே மீதமுள்ள 26 கடைகளுக்கு மட்டுமே நகராட்சி அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...