கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை காந்தி பார்க்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களைக் கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.


Coimbatore: கோவை காந்தி பார்க்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களைக் கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

11.07.2024 வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் VMC. மனோகரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் MN. கந்தசாமி, மாமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் அழகு ஜெயபாலன், மாநில பொதுச் செயலாளர்கள் பச்சைமுத்து, PS. சரவணக்குமார், மாநில செயலாளர் V. விஜயகுமார், மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மாவட்ட துணைத் தலைவர் V. வெங்கிடபதி வரவேற்புரை நிகழ்த்தினார். சர்க்கிள் தலைவர் ஐ.எஸ். மணி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் சுல்தான்பேட்டை கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி. ஆறுச்சாமி, வி.எம். ரங்கசாமி, செல்வபுரம் ஆனந்த், OBC செயல் தலைவர் பழனிச்சாமி, மோகன்ராஜ், லலிதா மோகன்ராஜ், கணபதி அசோக் குமார், பேரூர் மயில், மாரியப்பன் துரை அருள் தாஸ், ராஜ்குமார் உள்ளிட்ட பல்வேறு வட்டாரத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளைக் கண்டித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான அவதூறு குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், அரசியல் நாகரிகத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...