கோவையில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி தொடக்கம்: 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைப்பு

கோவை கொடிசியா வளாகத்தில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி ஜூலை 11 முதல் 15 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 450க்கும் மேற்பட்ட அரங்குகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.


கோவை: கோவை கொடிசியா தொழிற்கூட கண்காட்சி வளாகத்தில் 22-வது சர்வதேச வேளாண் கண்காட்சி இன்று (ஜூலை 11) தொடங்கியது. சர்வதேச அளவில் நடைபெறும் இந்த கண்காட்சி ஜூலை 15 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

வழக்கமாக 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி, இந்த ஆண்டு 5 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



இதில் 450க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, வேளாண் மற்றும் விவசாய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வேளாண் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், சைனா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.



கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த நாட்டு மாடுகளும், வெளிநாட்டு வகை ஆடுகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



மேலும், பல்வேறு விதைகள், இயற்கை குளிரூட்டிகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



தோட்டக்கலை சார்பில் நர்சரிகளும் அமைக்கப்பட்டு, பல்வேறு ரக செடிகள், பூச்செடிகள் ஆகியவற்றின் விற்பனையும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...