பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரம் சமுதாயக்கூடத்தில் ஜூலை 14 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. கண் புரை, குழந்தைகளின் கண் நோய்கள், கண் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வரும் ஜூலை 14ஆம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம், ஐ பவுண்டேஷன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஆகியவை இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளன.


பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம் செல்லும் சாலையில் 5 Corner பகுதியில் உள்ள விவேகானந்தபுரம் சமுதாயக் கூடத்தில் இந்த முகாம் நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கண் புரை கண்டறிதல், குழந்தைகளுக்கான கண் நோய்கள், கண் நீர் அழுத்த நோய், தூரப்பார்வை, கிட்டப் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பல்வேறு கண் நோய்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளனர்.


பெரியவர்கள், சிறியவர்கள் என கண் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த முகாமில் நிவாரணம் பெறலாம். கண்புரை பரிசோதனைக்கு பிறகு அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்து தரப்படும். முகாமில் கலந்து கொள்ள வரும் பொழுது ஆதார் அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...