மருத்துவமனைகள் மற்றும் தனியார் வணிக வளாகங்கள் கட்டாய தலைக் கவசம் அணியும் வளாகங்களாக வேண்டும் : காவல்துறை வேண்டுகோள்

தலைகவசம் அணிந்து வாகனம் ஓட்டுவது கட்டாயமாக உள்ள நிலையில், இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணியாமல் பணிப்பவர்களுக்கு அபாரதம் விதித்து வருகிறது காவல் துறை. இந்த நிலையில், கோவையில் உள்ள தனியார் வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் நுழையவும் தலை கவசம் அவசியம் என்று அறிவிக்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர காவல்துறை சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

கோவை மாநகரில் சாலை விபத்துகளை குறைக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள தனியார் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் 'கட்டாய தலை கவசம் அணியும் வளாகம்' என்று அறிவிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதனால் சாலை விபத்துகள் வெகுவாக குறையும். 

தற்போது, கோவையில் சில பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தை சரியாக கடைபிடித்து வருகின்றனர். இத்திட்டத்தை, கோவையில் உள்ள மற்ற கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளும் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

சாலை விபத்துக்களை தவிற்க , விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிர வாகன தனிக்கை நடைபெற உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கோவை மாநகர காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...