கோவை கல்லாறு அருகே கார் மீது பைக் மோதி விபத்து: இரண்டு இளைஞர்கள் பரிதாப பலி

கோவை கல்லாறு அருகே நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் மனைவி பயணித்த அரசு கார் மீது KTM பைக் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். விபத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது.


கோவை: கோவை கல்லாறு அருகே கார் மீது பைக் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் அவர்களின் மனைவி ஜூலை 8 ஆம் தேதி அரசு காரில் கோவைக்கு மேட்டுப்பாளையம் வழியாகச் சென்றார். முதல்நிலை காவலர் தமிழ் என்பவர் அந்த காரை ஓட்டிச் சென்றார்.

கார் கல்லாறு அருகே வந்து கொண்டிருந்தபோது, ஊட்டி காந்தல் பகுதியைச் சேர்ந்த காட்டேஜ் ஊழியர் அல்தாஃப் (21) மற்றும் கல்லூரி மாணவர் ஜூனைத் (19) ஆகிய இருவரும் KTM மோட்டார் பைக்கில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நோக்கிச் சென்றனர்.

எதிர்பாராத விதமாக, அல்தாஃப் அதிவேகமாக ஓட்டிச் சென்ற KTM மோட்டார் பைக் போலீஸ் அதிகாரியின் மனைவி பயணித்த காரின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.



இந்த விபத்தில் மோட்டார் பைக்கில் தீப்பற்றி மளமளவெனப் பற்றி எரியத் துவங்கியது. உஷாரான அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அல்தாஃப் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ஜூனைத் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...