நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை குறைந்துள்ளது - வே.ஈஸ்வரன் குற்றச்சாட்டு

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே.ஈஸ்வரன் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு சேர்க்கை 87% குறைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் நீட் தேர்வு குறித்து அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இயக்கத்தின் தலைவர் வே.ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.

நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வே.ஈஸ்வரன் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சிபிஎஸ்இ மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



"2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவம் படித்து வந்தனர். ஆனால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 87% அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது," என்று வே.ஈஸ்வரன் தெரிவித்தார்.

நீட் தேர்வு இல்லாவிட்டாலும் கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்த முடியும் என்றும், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிராமப்புற மாணவர்கள் நீட் கோச்சிங் மையங்களுக்குச் சென்று படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வே.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...