உடுமலையில் 15 நாட்கள் கண்களை கட்டிகொண்டு யோகாசனம் செய்யும் உலகசாதனை நிறைவு

உடுமலையில் யோக ஆசிரியர் குணசேகரன் 15 நாட்கள் கண்களைக் கட்டிக்கொண்டு 360 மணி நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தார். இச்சாதனை ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மரகதம் யோகாலயம் நடத்தி வரும் யோக ஆசிரியர் குணசேகரன், 15 நாட்கள் கண்களைக் கட்டிக்கொண்டு யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை முயற்சி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தொடங்கப்பட்டது.

தனியார் திருமண மண்டபத்தில் தொடர்ந்து 15 நாட்கள், 360 மணி நேரம் நடைபெற்ற இந்த சாதனை முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இச்சாதனை ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.



இந்த சாதனை குறித்து பேசிய யோக ஆசிரியர் குணசேகரன், "கண்பார்வை இல்லாதவர்களும் யோகாசனம் செய்து ஆரோக்கியம் பெறலாம் என்பதை வலியுறுத்தும் விதமாக கண்களைக் கட்டிக்கொண்டு யோகாசனங்கள் செய்தேன். ஏற்கனவே ஓடும் காரில் யோகாசனம், 4 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான யோகாசனம் போன்ற சாதனைகளை செய்துள்ளேன். அதன் அடுத்தகட்டமாக, இந்தியாவிலேயே முதல் முறையாக தொடர்ந்து 15 நாட்கள் யோகாசனம் செய்தேன். இந்த சாதனையை பாரத தேசத்திற்கு சமர்ப்பிக்கிறேன்," என்று கூறினார்.

இந்நிகழ்வில் ஹை ரேஞ்ச் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் இந்திய CEO சுமன் பாலே, லண்டன் CEO கே.ஸ்ரீகாந்த், சினேகம் டிரஸ்ட் சுவாமி சுனில்தாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...