கோவையில் மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த மனைவி: கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவையில் மருத்துவ அலட்சியத்தால் மனைவி உயிரிழந்த வழக்கில், கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழக மின் வாரிய உதவிப் பொறியாளர் சாய் பிரேமனின் (45) மனைவி ராஜலட்சுமி (43), 2018 ஜனவரி 8-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தாடை எலும்பில் சிறு விரிசல் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ரத்தம் செலுத்தப்பட்ட பின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

உடற்கூராய்வின் போது, ராஜலட்சுமிக்கு செலுத்தப்பட்ட ரத்தம் அவரின் உடலுக்கு பொருந்தாமல் இருந்ததும், நுரையீரல் காயமடைந்து அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. மருத்துவ அலட்சியம் காரணமாக மனைவி உயிரிழந்ததாக கூறி, சாய் பிரேமன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மாவட்ட குறைதீர் ஆணையத் தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணையின் முடிவில், மருத்துவமனை நிர்வாகமும் மருத்துவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பணிகளைச் செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ராஜலட்சுமியின் கணவருக்கு மருத்துவர்கள் அருண்குமார், தமிழ்செல்வன், ஆண்டனி, பாலசந்தர் ஆகியோர் சேர்ந்து ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜூலை 5-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பு மருத்துவ அலட்சியத்திற்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...